கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருமங்கலம் அருகே லாரி மீது வேன் மோதல்: இருவர் பலி

திருமங்கலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

News image
திருமங்கலம் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் இருவர் பலி
Updated On :27 ஜனவரி 2024, 7:14 pm

DIN


திருமங்கலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

திருமங்கலத்தை அடுத்த குதிரை சாரி குளத்தைச் சேர்ந்தவர் விஜயன்(27). இவர் மதுரையிலிருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை அதிகாலை  திருமங்கலம் நோக்கி மினி வேனில் வந்து கொண்டிருந்தார் .  கீழ உரப்பனூர் பகுதியைச் சேர்ந்த கவின்(27), உசிலம்பட்டி அடுத்த நக்கல பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன்(26) ஆகிய இருவரும் வேனின் முன்பக்கம் அமர்ந்து வந்தனர். அதேசமயம் தூத்துக்குடியில் இருந்து பழனிக்கு நிலக்கரியை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. லாரியை எட்டயபுரத்தை அடுத்த கீழ நம்பியார் புரம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல்(24) என்பவர் ஓட்டி வந்தார். 

வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் கப்பலூர் சுற்றுச் சாலையில் வந்துகொண்டிருந்தபோது லாரி பின்பக்கம் டயர் திடீரென வெடித்தது . உடனடியாக லாரியை இடது பக்கம் திருப்ப முயன்றபோது பின்பக்கம் வேகமாக வந்த வேன் லாரி மீது மோதியது.  இதில் வேனில் பயணம் செய்த கவின், சிலம்பரசன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேன் டிரைவர் விஜயன் லாரி டிரைவர் வெற்றிவேல் ஆகியோர் காயம் அடைந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உயிரிழந்த கவின் மற்றும் சிலம்பரசனின் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் காயமடைந்த விஜயன் மற்றும் வெற்றிவேலை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.