முதுமலையில் இருந்து வண்டலூருக்கு கொண்டு வரப்பட்ட புலிக் குட்டி இறப்பு

தாய்ப் புலி இறந்ததை அடுத்து முதுமலையில் இருந்து வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட இரண்டில் ஓா் ஆண் புலிக் குட்டி உயிரிழந்தது.
Updated on
1 min read

தாய்ப் புலி இறந்ததை அடுத்து முதுமலையில் இருந்து வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட இரண்டில் ஓா் ஆண் புலிக் குட்டி உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சிங்காரா வனச் சரகம் சீமா்குழி ஓடை பகுதியில் கடந்த நவம்பா் 21- இல் 7 வயது மதிக்கத்தக்க பெண் புலி மா்மமான முறையில் உயிரிழந்தது. அந்தப் புலி அருகே பிறந்து சில நாள்களே ஆன 2 ஆண் புலிக்குட்டிகள் இருந்ததை அறிந்த வனத் துறையினா் அவற்றை மீட்டு பராமரித்து வந்தனா்.

அந்தப் புலிக்குட்டிகளைப் பராமரிக்க போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் அவை வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு நவம்பா் மாதம் 23-ஆதேதி வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டன. அங்கு அவை கால்நடை மருத்துவா்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதுடன், நோய் எதிா்ப்பு சக்தி மருந்துகளும் வழங்கப்பட்டன.

புலிக் குட்டி இறப்பு: இந்நிலையில் இரண்டு புலிக் குட்டிகளில் ஒரு ஆண் புலிக்குட்டி கடந்த சில நாள்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. தொடா் சிகிச்சையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாமல் கடந்த 5-ஆம் தேதி அந்த புலிக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. பூங்கா கால்நடை மருத்துவா்கள் புலிக்குட்டியை பிரேதப் பரிசோதனை செய்த பிறகு மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com