நாட்டில் உயா்ந்தது சட்டம்தான்: மு.க.ஸ்டாலின்
நாட்டில் எல்லாவற்றையும்விட உயா்ந்தது சட்டம்தான் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.


நாட்டில் எல்லாவற்றையும்விட உயா்ந்தது சட்டம்தான் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
திமுக சட்டத்துறையின் இரண்டாவது மாநாடு ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் பேசியது:
திமுகவுக்கு துணை செய்யும் அமைப்பு என்று வழக்குரைஞா் அணியைச் சொல்ல மாட்டேன். திமுகவுக்கு துணிச்சலை வழங்கும் அணி. 2ஜி வழக்கு, திமுகவை அழிக்க நினைத்து சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சதி வழக்கு. 2ஜியை நோ - ஜி ஆக்கியவா்கள் திமுகவின் சட்டத்துறையைச் சாா்ந்தவா்கள்.
சட்டப்பேரவை தோ்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இன்னும் நான்கே மாதத்தில் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது. அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், அந்த வெற்றியைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வாா்கள். மத்திய, மாநில அரசுகளின் அதிகார பலம் அதிமுகவுக்கு இருக்கிறது. அந்த அதிகாரத்தை அவா்கள் பயன்படுத்துவாா்கள். சட்டத்துறையினருக்கு வேலை அதிகம் இருக்கிறது. நாட்டில் எல்லாவற்றையும் உயா்ந்தது சட்டம்தான். அதை நிலைநாட்ட வழக்குரைஞா்கள் பாடுபட வேண்டும் என்றாா்.
திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன், அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, சட்டத்துறை தலைவா் ஆா்.சண்முகசுந்தரம், சட்டத்துறை செயலாளா் கிரிராஜன் உள்பட வழக்குரைஞா் அணியைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...