

சென்னை: திமுக ஆட்சியில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்படும் என்று நாடாளுமன்றத் திமுக குழுத் துணைத் தலைவர் கனிமொழி கூறினார்.
திமுக சார்பில் சென்னை தியாகராய நகரில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அவர், நல உதவிகளை வழங்கி பேசியது:
தமிழகம் வெற்றிநடை போட வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைய வேண்டும். வரப் போகும் தேர்தல் தமிழர்களின் சுயமரியாதை மீட்டெடுக்கப் போகும் தேர்தல்.
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் இரண்டுமே தமிழர்களுக்கு மிக முக்கியமானது. தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்களின் சுயமரியாதை, அடையாளமாகும். திமுக ஆட்சி விரைவில் அமையும். அப்போது நிச்சயமாக தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.