/

தமிழகத்தில் புதிதாக 589 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 589 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜனவரி 2021, 12:58 pm


தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 589 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 164 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,30,772 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 770 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 7 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,12,568 பேர் குணமடைந்துள்ளனர், 12,264 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 5,940 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.