தமிழகத்தில் புதிதாக 551 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 551 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,31,323 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 158 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 758 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 8 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,13,326 பேர் குணமடைந்துள்ளனர், 12,272 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் 5,725 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.