பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோவையில் கடும் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறப்பு

பள்ளி திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அரசு அறிவித்த கட்டுப்பாடுகளின் கீழ் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

News image
கோவையில் கடும் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறப்பு
Updated On :19 ஜனவரி 2021, 6:37 am

DIN

பள்ளி திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அரசு அறிவித்த கட்டுப்பாடுகளின் கீழ் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

Story image

கோவையில் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு காலை 7.30 மணியில் இருந்தே மாணவிகளும், ஆசிரியர்களும் வரத்தொடங்கினர். மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என 653 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 86 ஆயிரம் மாணவ-மாணவிகள் 10 மற்றும் 12 வகுப்பு படித்து வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்தார். மேலும் 25 பறக்கும்படை அமைப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் செயல்பாடு மற்றும் மாணவர்கள் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Story image

கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கின. வெரைட்டி ஹால் சாலையில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பிரசன்டேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு காலை எட்டு மணியிலிருந்து ஆசிரியர்களும் மாணவிகளும் பள்ளிக்கு வரத் தொடங்கினர். பள்ளியில் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக ஒரு மீட்டர் இடைவெளி விட்டு கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கட்டங்கள் வாயிலாக சமூக விதிகளை பின்பற்றி மாணவிகள் பள்ளிக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 

Story image

மேலும் கிருமிநாசினி, முகக்கவசம் அணிவது குறித்து ஆசிரியர்கள் உறுதி செய்த பின்பே மாணவிகளும் ஆசிரியர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் வகுப்புக்கு 25 பேர் வீதம் 30-க்கும் மேற்பட்ட வகுப்பறைகளில் மாணவிகள் அமரவைக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

Story image

பள்ளிகள் திறப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வகுப்புகள் எடுப்பதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார். பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பாடம் கற்க ஆவலுடன் இருப்பதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.