பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் -காந்திமதியம்மன் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்
Updated On :19 ஜனவரி 2021, 3:00 am

DIN


திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் -காந்திமதியம்மன் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலையில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாய முழக்கத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறுகின்றன.

Story image

திருநெல்வேலி ஊரின் பெயர்க்காரணத்தை விளக்கும் வரலாற்று நிகழ்வான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு இம்மாதம் 22 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கும், இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி-அம்பாள் வீதியுலாவும் நடைபெற உள்ளது.

Story image

தைப்பூச நாளான இம் மாதம் 28 ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகள் சுவாமி நெல்லையப்பர் கோயிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, கீழ்பாலம் வழியாக கைலாசபுரத்தில் தாமிரவருணி நதியின் கரையோரம் உள்ள சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அங்கு சிறப்புத் தீபாராதனை முடிந்ததும் தீர்த்தவாரி நடைபெறும்.

Story image

இம் மாதம் 29-ஆம் தேதி சௌந்திர சபா மண்டபத்தில் வைத்து பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சௌந்திர சபா ஸ்ரீ நடராஜர் திருநடனக் காட்சி நடைபெறுகிறது.

Story image

30-ஆம் தேதி சத்திர புஷ்கரணி என்றழைக்கப்படும் வெளி தெப்பக்குளத்தில்  இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

படம்: சாய் வெங்கடேஷ்.உ.ச
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.