அறுவடை தீவிரம்: இம்மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி வட்டாரத்திலும், திருநெல்வேலியில் சுத்தமல்லி, பழவூர், கொண்டாநகரம், கல்லூர், மானூர், ரஸ்தா சுற்றுவட்டார பகுதிகளிலும் தை, மாசிப்பட்டத்தில் அறுவடை செய்யும் வகையில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. காற்றுக்காலத்திற்கு பின்பு குலைதள்ளுவதால் இந்த வாழைகளுக்கு கம்பு கொடுக்கப்படுவதில்லை. களக்காடு, திருக்குறுங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பங்குனி, சித்திரை பட்டத்தில் அறுவடை செய்யும் வகையில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. அப் பகுதி மண் வளம் காரணமாக அங்கு விளையும் ஏத்தன் காய்கள் மிகவும் திரட்சியாகவும், குலைகள் எடை அதிகமாகவும் இருக்கும்.