எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அந்தியூர் அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி

அந்தியூர் அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

News image
அந்தியூர் அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி
Updated On :21 ஜனவரி 2021, 4:10 am

DIN

பவானி: அந்தியூர் அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

சத்தியமங்கலம், கெம்பநாயக்கன்பாளையம் அம்மன் நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் செல்வன் (58). அதே பகுதியில் உள்ள சாவடி வீதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ராஜன் (42). சோளத்தட்டு வியாபாரிகளான இருவரும் புதன்கிழமை இரவு அத்தாணியிலிருந்து அந்தியூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

கம்மங்காடு அருமலை கவுண்டர் தோட்டம் அருகே சென்றபோது எதிரில் வந்த காரும்,  இருசக்கர வாகனமும் எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.