தமிழகத்தில் புதிதாக 540 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 540 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 540 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 540 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,35,280 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 157 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் 627 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 4 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,18,147 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 12,320 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி இன்னும் 4,813 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com