சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

விவசாயிகளுக்கு ஆதரவாக அவிநாசியில் தேசியக் கொடியுடன் வாகனப் பேரணி

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, அவிநாசியில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனர்.

News image
விவசாயிகளுக்கு ஆதரவாக அவிநாசியில் தேசியக் கொடியுடன் வாகனப் பேரணி
Updated On :26 ஜனவரி 2021, 7:46 am

DIN

அவிநாசி: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, அவிநாசியில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி, தில்லியில் தொடர்ந்து 60 நாள்களுக்கும் மேலாக பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் முகாமிட்டு போராடி வருகின்றனர். மேலும் குடியரசு தினத்தன்று 100 கிலோமீட்டர் டிராக்டர் பேரணி நடத்துவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதையடுத்து அவிநாசியில்  அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில், செவ்வாயக்கிழமை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. 

Story image

முன்னதாக அவிநாசி ஆட்டையாம்பாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் முத்துசாமி தேசியக் கொடி ஏற்றியேற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து ஆட்டையம்பாளையத்தில் துவக்கிய இருசக்கர வாகனப் பேரணி பழைய பேருந்து நிலையம் வழியாக  புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. நிறைவாக, பேரணியில் பங்கேற்றோர் மூன்று வேளாண் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு கலைந்து சென்றனர்.

நிறைவாக உறுதிமொழி ஏற்று கலைந்து சென்ற குழுவினர்.

நிறைவாக உறுதிமொழி ஏற்று கலைந்து சென்ற குழுவினர்.

இதில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கே.எம்.இசாக், காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் வழக்குரைஞர் கோபாலகிருஷ்ணன், சாய் கண்ணன், கொமதேக லோகநாதன், மதிமுக சுப்பிரமணி, பாபு, திமுக பழனிசாமி, சிவப்பிரகாஷ், அவிநாசியப்பன் உள்பட அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.