கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பரமத்திவேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து: பால் வியாபாரி உள்பட 2 பேர் பலி 

நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் பால் வியாபாரி உள்பட இரண்டு இளைஞர்கள் பலியானது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வ

News image
பரமத்திவேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த கார். 
Updated On :27 ஜனவரி 2024, 7:23 pm

DIN

நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் பால் வியாபாரி உள்பட இரண்டு இளைஞர்கள் பலியானது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சந்துரு ஆகிய இருவரும்  நள்ளிரவு பிரபுவுக்கு சொந்தமான காரில் மொடக்குறிச்சியில் இருந்து பால் எடுத்துக்கொண்டு பரமத்தி வேலூர் நோக்கி வந்துள்ளனர். 

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தனர். பரமத்தி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே வந்த போது கார் எதிர்பாராதவிதமாக கார் கவிழ்ந்துள்ளதாக தெரிகிறது. இதில் காரில் இருந்த சந்துரு படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். காரை ஓட்டி வந்த பிரபு படுகாயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு உயிரிழந்தார்.  விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.