தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஜெயலலிதா நினைவிடம்: வரிசையில் நின்று பார்வையிடும் தொண்டர்கள்!

மெரீனாவில் குவிந்துள்ள ஏராளமான தொண்டர்கள் வரிசையில் நின்று ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

News image

ஜெயலலிதா நினைவிடம்: வரிசையில் நின்று பார்வையிடும் தொண்டர்கள்!

Updated On :27 ஜனவரி 2021, 6:13 am

DIN

ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்ததைத் தொடர்ந்து, அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மெரீனாவில் குவிந்துள்ள ஏராளமானத் தொண்டர்கள் வரிசையில் நின்று ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான தொண்டர்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் இன்று சென்னை மெரீனா வந்தடைந்தனர். 

நினைவிடத் திறப்பையொட்டி காமராஜர் சாலையில் குவிந்த தொண்டர்கள், ரிப்பன் வெட்டி ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறக்கும்போது முழக்கங்களை எழுப்பினர்.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், மற்றும் அமைச்சர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று நினைவிடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.