தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி அனைத்து தொகுதி பொறுப்பாளர்களுடனும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

News image
தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை (கோப்புப்படம்)
Updated On :30 ஜனவரி 2021, 6:19 am

DIN

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி அனைத்து தொகுதி பொறுப்பாளர்களுடனும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவுள்ளது.

இதனிடையே தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வியூகங்களின் அடிப்படையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டணி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அதன்படி கட்சி தலைமைகள் செயல்பட்டு வருகின்றன.

இதேபோன்று தேமுதிகவின் தேர்தல் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேபாளர்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.