எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விசைப்படகு நடுக்கடலில் மூழ்கி தத்தளித்த பழையாறு மீனவர்கள்: காப்பாற்றிய காரைக்கால் மீனவர்கள்

நடுகடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, திடீரென விசைப்படகு கடலில் மூழ்கியதில் கடலில் விழுந்து தத்தளித்த பழையாறு மீனவர்கள் ஐந்து பேரை பத்திரமாக மீட்டு காரைக்கால் அழைத்து வந்தனர் காரைக்கால் மீனவர்கள்

News image
நடுக்கடலில் மூழ்கி தத்தளித்த பழையாறு மீனவர்களை காப்பாற்றிய காரைக்கால் மீனவர்கள்.
Updated On :3 ஜூலை 2021, 5:01 am

DIN

சீர்காழி: நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, திடீரென விசைப்படகு கடலில் மூழ்கியதில் கடலில் விழுந்து தத்தளித்த பழையாறு மீனவர்கள் ஐந்து பேரை பத்திரமாக மீட்டு காரைக்கால் அழைத்து வந்தனர் காரைக்கால் மீனவர்கள்.

சீர்காழி வட்டம், புதுப்பட்டினம் ஊராட்சி பழையார் மீனவர்கள் செல்வராஜ் மகன் மதி (55) , பெரிய மதி மகன் ஹரிஸ் (22) , அய்யா கண்ணு மகன் நகுலன், வேலுநாடார் மகன் முத்தையா (60), வீரப்பன் மகன் ராஜதுரை (45) ஆகிய 5 பேரும் சேதுராஜன் என்பவருக்கு சொந்தமான பெரிய விசை படகில் சனிக்கிழமை காலை 3 மணியளவில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மூன்றரை கி.மீ கடல் நாட்டி கல் தூரத்திற்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென விசைப்படகு கடலில் மூழ்க தொடங்கியது. இதில் படகில் இருந்த ஐந்து மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

அப்போது அந்த வழியாக மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் விசைப்படகில் கடலில் தத்தளித்த 5 மீனவர்களையும் பத்திரமாக ஏற்றிக் கொண்டு காரைக்கால் அழைத்து வந்தனர். 

இந்நிலையில், கடலில் முழுவதுமாக மூழ்கிய படகை  கடலூரில் இருந்து வரும் சிறப்புக் குழுவினர் சிலிண்டர் உதவியுடன் கடலில் மூழ்கி தேடும் பணியில் ஈடுபட உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.