மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோரையாற்றில் அதிக தண்ணீர்: மக்களுக்கு எச்சரிக்கை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கோரையாற்றில் தண்ணீர் அதிக அளவில் ஓடுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. 

News image
கோரையாற்றில் அதிக தண்ணீர்: மக்களுக்கு எச்சரிக்கை
Updated On :3 ஜூலை 2021, 9:44 am

DIN


கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கோரையாற்றில் தண்ணீர் அதிக அளவில் ஓடுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. 

கூத்தாநல்லூர் கோரையாற்றில் தூர் வாரப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டது. மேலும், இருபுறங்களிலும் கரைகள் உயர்த்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில், ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் அதிக அளவில் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே ஊரடங்கின் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடுகளில் இருப்பதால், அநேக நேரங்களில் ஆற்றுக்கு நண்பர்களுடன் குளிக்கச் செல்கின்றனர். இதில், நீச்சல் தெரியாதவர்கள் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது.

கடந்த ஆண்டு பொறியியல் மாணவர், 3 ஆம் வகுப்பு சிறுவன், 10 வயது மாணவர் என மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும், விவசாய தொழிலாளர்கள் சங்க நகரச் செயலாளர் மகன், ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் காப்பாற்றப்பட்டார்.

தற்போது, கோரையாற்றில் வெள்ளம் போல், தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால், கரையோரத்தில் வசிப்பவர்களும் ஆற்றில் குளிக்கச் செல்பவர்களும் கவனமாக செயல்பட வேண்டும் என வருவாய் துறை சார்பில்,எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.