தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பார் கடற்கரையில் இருந்து 2. 61 டன் விராலி மஞ்சள் கடத்த முயன்ற மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இருந்து இலங்கைக்கு விராலி மஞ்சள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை எடுத்து கீழவைப்பார் கடற்கரைப் பகுதியில் கியூ பிரிவு உதவி ஆய்வாளர் ஜீவமணி தலைமையிலான காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தியபோது அங்கு ஒரு படகில் ஏற்றுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த 2. 61 டன் விராலி மஞ்சள் இருப்பது தெரியவந்தது.
இதனை பறிமுதல்செய்த காவலர்கள் இதுதொடர்பாக ராபின்சன், ஸ்ரீலாஸ், வினித், ஆகிய மூன்று பேரை பிடித்து குளத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.