மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நியாயவிலைக் கடைகளில் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு

அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், மக்கள் புகாரளிக்க வசதியாக, புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image

நியாயவிலைக் கடைகளில் மீண்டும் அமலுக்கு வரும் பழைய முறை

Updated On :10 ஜூலை 2021, 6:03 am

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், மக்கள் புகாரளிக்க வசதியாக, புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பதிவேடு வைத்து, பொதுமக்கள் புகாரளிக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகள் குறித்து இணையதளத்தில் புகாரளிக்கும் முறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், நியாயவிலைக் கடைகளிலேயே புகார் பதிவேடு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புகார் பதிவேடு முறையில் உடனடியாக புகாரை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இணையதளத்தில் புகாரளிக்கும் முறையுடன், புகார் பதிவேடு முறையும் நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.