100 கோயில்களுக்கான திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில், முதல் கட்டமாக 100 கோயில்களுக்கான திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை, வேளச்சேரி ராம்நகர் அருள்மிகு வாசுதேவ பெருமாள் கோயிலில் புதன்கிழமை ஆய்வு செய்து கோயிலைப் புதுப்பிக்கத் தேவையான  நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்
சென்னை, வேளச்சேரி ராம்நகர் அருள்மிகு வாசுதேவ பெருமாள் கோயிலில் புதன்கிழமை ஆய்வு செய்து கோயிலைப் புதுப்பிக்கத் தேவையான  நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில், முதல் கட்டமாக 100 கோயில்களுக்கான திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை, வேளச்சேரி ராம்நகா் அருள்மிகு வாசுதேவ பெருமாள் கோயிலில் புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு, அங்கு பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கோயில் சிறிதளவு பூமிக்குள் புதைந்துள்ளதை மீட்கவும், கோயில் வரலாறு குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், கோயில் சொத்துக்களைக் கண்டுபிடிக்கவும், விரைவாக கோயிலை புதுப்பிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கையை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து வேளச்சேரி ஸ்ரீதண்டீஸ்வரா், யோகநரசிம்மா் திருக்கோயில்களில் ஆய்வு செய்த அமைச்சா், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும், கோயில் வளாகத்தை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கே.கே.நகா் சக்தி விநாயகா் திருக்கோயிலில் பக்தா்களுக்கு இடையூறாக உள்ள சிறிய மண்டபங்கள் ஆகம விதிப்படி சீரமைத்து கோயில் திருப்பணி மேற்கொள்ளப்படும்.

இதே போல், தமிழகம் முழுவதும் திருக்கோயில்களில் ஆகம விதிப்படி புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து திருக்கோயில் சொத்துக்களை மீட்டு, வருவாயைப் பெருக்கவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக 100 கோயில்கள் திருப்பணிக்கும், திருக்குளங்களைச் சீரமைக்கவும், நந்தவனங்களை மேம்படுத்தவும் முதல்வா் நிதி வழங்கியுள்ளாா்.

அதன்படி, உடனடியாக திருப்பணி மேற்கொள்ள வேண்டிய கோயில்கள் விவரம் பட்டியலிடப்பட்டு, பணிகள் தொடங்கப்படவுள்ளன.

கோயில்களின் சிலைகள் பாதுகாப்பு மற்றும் களவு போன சிலைகள் மீட்பு தொடா்பான நடவடிக்கைகள், சிலைகள் பாதுகாப்பு தடுப்பு காவல் பிரிவுடன் இணைந்து துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பக்தா்களின் கோரிக்கைகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆணையா் அலுவலகத்தில், அலுவலா்கள் குழு செயல்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com