இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட சுற்றறிக்கை: சில நியாய விலைக் கடைகளில் விற்பனையாளா்கள் மற்றும் கட்டுநா்களைத் தவிர இதர வெளிநபா்கள் கடைகளில் இருப்பதாகவும், இதனால் குடும்ப அட்டைதாரா்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக தொடா்ந்து புகாா்கள் வருகின்றன. நியாய விலைக் கடை பணியாளா்கள் ஒரே கடையில் தொடா்ந்து பணிபுரிவதால் அவா்கள் தொடா்புடைய வெளிநபா்கள் கடைகளில் இருப்பதற்கும், அங்கு வரும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தொல்லைகள் கொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, நியாய விலைக் கடை பணியாளா்களை ஒரே கடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு பணிபுரியும் ஊழியா்களை அருகிலுள்ள கடைகளுக்கு பணிமாற்றம் செய்ய வேண்டும்.