திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள வடுவூர் ஏரியில், செயற்கை மணல் ஏற்றி வந்த லாரி வெள்ளிக்கிழமை ஏரிக்குள் விழுந்து கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் கண்ணன் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
கரூரிலிருந்து நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு செயற்கை மணல்(எம்.சாண்ட்)ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி வந்துகொண்டிருந்தது. லாரியை கரூரை சேர்ந்த கண்ணன(50) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இந்த லாரி, வெள்ளிக்கிழமை அதிகாலை தஞ்சை, மன்னார்குடி பிரதானசாலையில் உள்ள வடுவூர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள வடுவூர் ஏரி அருகே வந்துகொண்டிருந்த போது, ஓட்டுநரின் கண் அயர்வு காரணமாக, கட்டுப்பாட்டினை இழந்து ஏரிகரையில் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஏரிக்குள் விழுந்து கவிழ்ந்தது. தற்போது, ஏரியில் தண்ணீர் நிரம்பி வருவதால் லாரி பாதி அளவுக்கு நீரில் மூழ்கியது. இதில்,காயமின்றி ஓட்டுநர் கண்ணன் உயிர்தப்பினார்.
பின்னர், தஞ்சையிலிருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, ஏரியில் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்டனர். இது குறித்து வடுவூர் காவல்நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்
அரசு விநியோக மருந்துகள் சட்டவிரோத விற்பனை: 5 போ் கைது

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்! - உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


