ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

முகக்கவசம் அணியாதவா்கள் மீது 108 நாள்களில் 18.63 லட்சம் வழக்குகள்

தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 108 நாள்களில் 18,63,868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

News image
Mask compulsory
Updated On :26 ஜூலை 2021, 10:40 pm

DIN

சென்னை: தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது களில் 18,63,868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்த விவரம்:

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா். கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 25-ஆம் தேதி வரை 108 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 18 லட்சத்து 63 ஆயிரத்து 868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8 ஆயிரத்து 89 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 25-ஆம் தேதி வரை 108 நாள்களில் 89 ஆயிரத்து 687 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.