ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட சார்பில் காட்டூர் சக்தி நகரில் திமுக அரசைக் கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  புறநகர் மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமை வகித்தார்.

News image
ப.குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டம்
Updated On :28 ஜூலை 2021, 7:07 am

DIN

திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட சார்பில் காட்டூர் சக்தி நகரில் திமுக அரசைக் கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  புறநகர் மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமை வகித்தார்.

அரியமங்கலம் பகுதிச் செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் குமார் பேசுகையில், 505 வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் மக்களிடம் பரப்பி ஆட்சியைப் பிடித்து இதுவரை கோரிக்கைகளை சரியாக நிறைவேற்றவில்லை. மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.

தொடர்ந்து திமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் குமார், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த தேர்தலில் 505 வாக்குறுதிகளை பொதுமக்களிடம் சொல்லி ஓட்டு வாங்கியவர். அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறார். இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களிடம் 505 வாக்குறுதிகளையும், திருச்சி பகுதிக்கு மட்டும் 35 வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளார்.

60 மாதம் வரை அவர்கள் ஆளமுடியும் 60 மாதத்திற்கு தினமும் ஒரு கோரிக்கையை நிறைவேற்றினால்தான் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி முடிக்க முடியும் . தற்பொழுது மூன்று மாதம் முடிந்து உள்ளது சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

இந்நிலை நீடித்தால் தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது போல் தமிழகத்திலும் நாங்கள் நீதிமன்றம் செல்ல நேரிடும். அந்த நிலைக்கு எங்களை செல்லவிடாமல் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை மக்களுக்கு உடனடியாக நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வட்ட செயலாளர்கள் வேல்முருகன், கே.பி.சங்கர், தெய்வமணிகண்டன், ரவிசங்கர், ஆர்பி கணேசன், விஷ்வநாதன் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.