பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தாறு I & II அணைகளிலிருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு 04.06.2021 முதல் 28.02.2022 வரை வினாடிக்கு 850 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனப் பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.