மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் பலத்த மழை: ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுவேத நதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்து செந்நீராக கரை புரண்டு பாய்ந்தோடியது.

News image
சுவேத நதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்து கரை புரண்டு பாய்ந்தோடும் செந்நீர்.
Updated On :6 ஜூன் 2021, 3:42 am

DIN

 
தம்மம்பட்டி: தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுவேத நதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்து செந்நீராக கரை புரண்டு பாய்ந்தோடியது.

Story image

சுவேத நதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடும் செந்நீர்.

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி, கூடமலை, தெடாவூர் கெங்கவல்லி, வீரகனூர், கவர் பனை சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை 5 மணியிலிருந்து இரவு வரை தொடர்ந்து இடி, மின்னலுடன்  பலத்த மழை பெய்தது.

விவசாய  வயல்களில் மழை நீர் நன்கு தேங்கி நின்றது. பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

Story image

 பெருக்கெடுத்து ஒடும் மழை நீர்

அருகே உள்ள கொல்லிமலையில் உள்ள குண்டனி, வேலிக்காடு, கீரைக்காடு என 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களிலும் இரவு முழுதும் பலத்த மழை பெய்ததையடுத்து, மலையடிவாரத்தில் வறட்டாற்று பிறப்பிடமான எழுத்துக்கல்லில் மழை நீர் பெருக்கெடுத்தது. 

மேலும், பெரியாற்றிலும் மழை நீர் பெருக்கெடுத்தது. இரு ஆறுகளும் இணைந்து தம்மம்பட்டியில் உருவாகும் சுவேத நதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்து செந்நீராக கரை புரண்டு பாய்ந்தோடியது.

இப்பகுதி மக்கள் இதனை ஆர்வமாக பார்த்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.