தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மன்னார்குடி, கோட்டூரில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

கோட்டூரில் கரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image

கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

Updated On :8 ஜூன் 2021, 7:54 am

DIN

மன்னார்குடி மற்றும் கோட்டூரில் கரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கோரிக்கைகள் : கரோனா தடுப்பு மருந்துகள் எண்ணிக்கையை தமிழ்நாட்டிற்கு குறைக்காமல் வழங்கிட வேண்டும். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் (எச்.எல்.எல்.) பயோடெக் ஒருங்கிணைந்த தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தையும் அது தொடர்பான சொத்துக்களையும் தமிழக அரசிடம் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும்.

மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இழப்பீட்டு தொகை உட்பட தமிழகத்திற்கு
தரவேண்டிய நிதி பாக்கி தொகை அனைத்தையும் உடனடியாக மாநில அரசுக்கு
வழங்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து பெட்ரோல் விலை ரூ. 50 க்கும், டீசல் விலை ரூ. 40 க்கும் விற்பனை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தலைமை  அஞ்சல் நிலையம் அருகே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் தலைமையில் கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெற்றது.

இதில், சிபிஐ ஒன்றிய செயலர் ஆர்.வீரமணி, நகரசெயலர் வி.கலைச்செல்வன், இளைஞர் மன்ற மாவட்ட செயலர் துரை. அருள்ராஜன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பி.பாஸ்கரவள்ளி,மாதர் சங்க ஒன்றிய செயலர் ஆர்.பூபதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போன்று , மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு , சிபிஐ மாவட்டச் செயலரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான வை.சிவபுண்ணியம் தலைமை வகித்தார்.

ஒன்றியச் செயலர் (பொ) எம்.செந்தில்நாதன் ,கோட்டூர் ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை முருகேசன் , வி தொ ச ஒன்றியச் செயலர் ஜெ.ஜெயராமன் , இளைஞர் பெருமன்ற ஒன்றியச் செயலர் எம் .நல்ல சுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன முழுக்கம் எழுப்பி ஆர்ப்பாட்பத்தில் ஈடுப்பட்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.