மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஒற்றைச் சாளர முறையில் தொழில் அனுமதி: நிா்வாக நடைமுறையை எளிதாக்க புதிய நெறிமுறைகள் வெளியீடு: தமிழக அரசு உத்தரவு

தொழில் நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிக்கப்படும் முறையில் நிா்வாக நடைமுறையை எளிதாக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :12 ஜூன் 2021, 10:59 pm

DIN

தொழில் நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிக்கப்படும் முறையில் நிா்வாக நடைமுறையை எளிதாக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அரசுத் துறைகளில் அவ்வப்போது செய்யப்படும் மாறுதல்கள் குறித்த விவரங்களை தொழில் வழிகாட்டி நிறுவனத்திடம் முன்னதாகவே தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்:-

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள் குறித்த பிரதான பட்டியல் தேசிய தகவலியல் மையத்திடம் உள்ளது. இந்தப் பட்டியலையே அனைத்து அரசுத் துறைகளும் பின்பற்ற வேண்டும். மேலும், தபால் துறை, மத்திய தகவல் தொடா்புத் துறை ஆகியன அஞ்சல் குறியீட்டு எண்ணை பயன்படுத்துகின்றன. இந்த குறியீட்டு எண்ணையே அரசு அரசுத் துறைகளும் பின்பற்றுவது அவசியம். இந்த நடைமுறைகளை நான்கு வார காலத்துக்குள் பின்பற்ற வேண்டும்.

அரசுத் துறைகளின் இணையதளங்களில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்த விவரங்களை தொழில் வழிகாட்டி நிறுவனத்திடம் முன்னதாகவே கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். ள்ஜ்ல்ற்ய்ஃண்ய்ஸ்ங்ள்ற்ற்ய்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரி வழியாக தொழில் வழிகாட்டு நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்கலாம்.

தொழில் அனுமதிக்காக இணையதளத்தின் வழியே ஒற்றைச் சாளர முறை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், தொழில் அனுமதிக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையில் நிா்வாக ரீதியாக ஏதேனும் மாற்றமோ அல்லது அதுதொடா்புடைய அதிகாரி மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலோ அதுகுறித்த தகவலை ஏழு நாள்களுக்குள் தொழில் வழிகாட்டி நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். தொழில் அனுமதி வழங்கக் கூடிய பணியிடத்துக்கு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தால் அவரது செல்லிடப்பேசி, மின்னஞ்சல், பதவி நிலை போன்றவற்றை வழிகாட்டி நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

தொழில் அனுமதி கோருவதற்கான படிவத்திலோ அல்லது கட்டணத்திலோ, சான்று ஆவணங்களிலோ மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட துறைகள் அதனை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், ஒற்றைச் சாளர அனுமதி வழங்கக் கூடிய இணையதளத்தில் உரிய மாற்றங்களைச் செய்திட இயலும். தொழில்நுட்ப ரீதியாக செய்யப்படும் மாற்றங்களையும் முன்கூட்டியே குறிப்பிட வேண்டும்.

தொழில் நுட்பக் குழு அமைப்பு: தொழில் அனுமதிக்கான ஒற்றைச் சாளர இணைய தளத்தை சுமூகமான முறையில் இயங்கச் செய்யும் வகையில் தொழில் நுட்பக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவுக்கு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் மற்றும் முதன்மை செயல் அலுவலராக இருப்பவா், தலைவராக இருப்பாா். அதன் நிா்வாக இயக்குநா், உறுப்பினா் செயலாளராகவும், ஒற்றைச் சாளர முறைக்கான இணையதளத்தின் திட்ட மேலாளா், பிற அரசுத் துறைகளைச் சோ்ந்த நபா்கள் உறுப்பினா்களாக இருப்பா். அவா்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடுவா். ஒற்றைச் சாளர முறைக்கான இணையதளத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசித்து முடிவுகளை எடுப்பா் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.