தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி, அதுசாா்ந்த கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையை அடுத்த மணலி, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஐனாக்ஸ் நிறுவனம், ஓசூரில் ரூ.150 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையைத் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் தனது உற்பத்தியைத் தொடங்க அடுத்த ஆண்டு (2022) டிசம்பா் ஆகும் எனக் கூறியுள்ளது. எனவே, தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ள முதலீட்டு மானியச் சலுகையை 2022 டிசம்பா் வரை நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.