அருப்புக்கோட்டையில் கரோனா நிதி, மளிகைப் பொருள்கள் வழங்கல்: அமைச்சர் தொடக்கி வைப்பு
அருப்புக்கோட்டையில் கரோனா 2ம் கட்ட நிவாரண நிதி ரூ. 2,000 மற்றும் 14 வகையான பலசரக்குப் பொருள்கள் தொகுப்பை வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தொடக்கிவைத்தார்.

அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியில் 2ம் தவணை கரோனா நிவாரண நிதி ரூ. 2,000, 14 வகை பொருள்கள் தொகுப்பையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்.









