சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் ஆன்டனி கிளமன் ரூபன் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழ்நாடு கமாண்டோ பயிற்சிப் பள்ளியில் மோப்பநாய் பயிற்சிக்காக சிப்பிப்பாறை நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக வாங்ப்பட்ட சிப்பிப்பாறை நாய் ஒன்றுக்கு முறையாக பயிற்சி அளிக்க முடியவில்லை. எனவே, அந்த நாயை விற்க ஏல அறிவிப்பு விடப்பட்டுள்ளது. இதுபோன்ற ஏலத்தில் நாயை வாங்குபவர்கள் அந்த நாயை முறையாக பராமரிக்கமாட்டார்கள். எனவே பாரம்பரிய நாட்டு வகை நாயான சிப்பிப்பாறை நாயை தவறான இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்துவார்கள் என கோரியிருந்தார்.