மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

நாகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் நாகை அவுரித்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

News image
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
Updated On :28 ஜனவரி 2024, 3:31 am

DIN

நாகப்பட்டினம் : பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் நாகை அவுரித்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு குறைக்கவேண்டும், கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வரி செலுத்தாத அனைவருக்கும் தலா ரூ.7,500 நிவாரணமாக வழங்கவேண்டும் என்றக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான எம். செல்வராஜ் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.பி.நாகை மாலி (கீழ்வேளூர்)ஜெ.முகமது ஷா நவாஸ் ( நாகை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாவட்டப் பொருளாளர் ராமலிங்கம், ஒன்றியச் செயலாளர் கோ. பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்வி.சரபோஜி, சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் ஏ.பி.தமீம் அன்சாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றியச் செயலாளர் பி.டி. பகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச்செயலாளர் கதிர்நிலவன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

கீழ்வேளூரில்... இதேபோல், நாகை மாவட்டம், கீழ்வேளூர் கடை வீதியில், கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் அபுபக்கர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.கே.நாகராஜன், விடுதலைச் சிறுத்தைகள்கட்சி நாகை மாவட்டத்துணைச் செயலாளர் பேரறிவாளன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். 50  பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.