சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதால் செயற்குழு உறுப்பினர்களுடன் காங்கிரஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனையில் தினேஷ் குண்டுராவ், வீரப்பமொய்லி, கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்காக திமுக - காங்கிரஸ் இடையே இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை டைபெற்று உள்ளது.
காங்கிரஸ் தரப்பில் 41 தொகுதிகள் கேட்கப்பட, திமுக 22 தொகுதிகள் தர முன் வந்துள்ளது. பின்னர் மீண்டும் நடைபெற்ற 2ம் கட்டப் பேச்சில் 22 முதல் 24 தொகுதிகள் வரை காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டுல் இழுபறி நீடித்து வருவதால், செயற்குழு உறுப்பினர்களுடன் காங்கிரஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.