அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருணாஸ் பேசியதாவது, ''முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை அதிமுக நிறைவேற்றவில்லை என்பதால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம். இரு சமூகத்துக்கு சொந்தமான அமைப்பாக எடப்பாடி கே.பழனிசாமி மாறிவிட்டார் என்று கூறினார்.
மேலும், இளைஞர்களைத் திரட்டி அதிமுகவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம் என்றும், முக்குலத்தோர் சமுதாயத்துக்கு அதிமுக செய்த துரோகத்தை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம்'' எனவும் தெரிவித்தார்.