சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரித்த போது சிறப்பு வகுப்புகளுக்கு சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களிடம் படிக்கும் வயதில் இது போன்று தோடு, சங்கிலி அணிந்து செல்வது தவறு, நாங்கள் படிக்கும் காலத்தில் வகுப்பு ஆசிரியர்கள் இதுபோன்று அணிந்து வந்தால் கடும் நடவடிக்கை எடுப்பார்கள், பள்ளிகளில் நன்னெறி வகுப்புகளில் இதுபோன்ற செயல்கள் தவறு என சொல்லி கொடுப்பார்கள், எனவே படிக்கும் வயதில் இதுபோன்ற அணிகலன்கள் வேறு மாதிரியான தோற்றத்தை அளிக்கும் என அறிவுறுத்தியதுடன் அவர்களிடம் இருந்த தோடு, சங்கிலி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து குப்பையில் வீசினர்.