தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவையில் ரயில் மோதி படுகாயமடைந்த யானைக்கு தொடர் சிகிச்சை

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே நவக்கரை மலைக்கிராமத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானை மீது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில், யானை படுகாயமடைந்தது.

News image
கோவையில் ரயில் மோதி படுகாயமடைந்த யானைக்கு தொடர் சிகிச்சை (கோப்பிலிருந்து)
Updated On :15 மார்ச் 2021, 7:11 am

DIN


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே நவக்கரை மலைக்கிராமத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானை மீது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில், யானை படுகாயமடைந்தது.

ரயில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட யானை, படுகாயங்களுடன் நகர முடியாமல் படுத்துக் கிடக்கிறது. அதன் இடது தந்தம் நொறுங்கியுள்ளது. பின்னங்கால்களை அசைக்க முடியாமல் இருப்பதைப் பார்த்த கால்நடை மருத்துவர்கள், அதன் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சுகின்றனர்.

யானை எழுந்து நிற்க முடியாமல் படுத்தபடியே இருப்பதால், அங்கேயே கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். யானையை வேறு இடத்துக்குக் கூட்டிச் சென்று சிகிச்சை அளிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பின், யானையை வேறு இடத்துக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளிப்பதும் சிரமமாக இருக்கும் என்பதால், கால்நடை மருத்துவர்கள் யானையின் உடல்நிலையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.

நவக்கரை மலைக்கிராமத்தை ஒட்டியிருக்கும் வனப்பகுதியில் வாழும் யானைகள், இந்த ரயில் தண்டவாளத்தைத் தாண்டிச் சென்றுதான் வாளையாறு ஆற்றில் நீர் அருந்த வேண்டும். எனவே, இந்த வனக் கிராமங்களைக் கடக்கும் ரயில்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டாலும், சில ஓட்டுநர்களின் கவனக்குறைவாலும், அதிவேகத்தாலும் இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது நேருவதாகவும் மலைக்கிராம மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.