விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஏற்காட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜோதி வேட்புமனு

சேலம் மாவட்டம் ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜோதி இன்று செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

News image
வாழப்பாடியில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜோதி
Updated On :16 மார்ச் 2021, 9:49 am

DIN

சேலம் மாவட்டம் ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜோதி இன்று செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் பனமரத்துப்பட்டி ஒன்றியம் தும்பல்பட்டி ஊராட்சி அடிமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் என்பவரின் மனைவியான,  முதுநிலை கணிதம் (எம்.எஸ்சி)  பி.எட்., படித்த பட்டதாரிப் பெண் ஜோதி (26). வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர் இன்று செவ்வாய்க்கிழமை வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில், ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சேலம் தனித்துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) பி.கே. கோவிந்தனிடம் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி ஏற்காடு தொகுதி பொறுப்பாளர் கார்த்திக், வீரபாண்டி தொகுதி பொறுப்பாளர் மோகனவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.