தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

காங்கயம் அருகே, மூதாட்டி ஒருவர் புதன்கிழமை காலை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

News image
காங்கயம் அருகே, கிணற்றில் தவறி விழுந்து இறந்த மூதாட்டியின் சடலத்தை, கிணற்றில் இறங்கி மீட்கும் தீயணைப்புப் படை வீரர். 
Updated On :17 மார்ச் 2021, 11:08 am

DIN

காங்கயம் அருகே, மூதாட்டி ஒருவர் புதன்கிழமை காலை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

காங்கயம் அருகே, வரதப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன், விவசாயி. இவரது மனைவி கமலாத்தாள் (71). கமலாத்தாள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில், கமலாத்தாள் புதன்கிழமை காலை 6 மணியளவில், வீட்டிற்கு வெளியே வந்து நடந்து சென்றவர், எதிர்பாராதவிதமாக அருகே இருந்த தனியாருக்குச் சொந்தமான 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காங்கயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.