காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

திருச்சியில் விதிமீறல்: வேட்பாளர் மீது வழக்குப் பதிவு; காவல் ஆய்வாளருக்கு மெமோ

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் எம். முருகானந்தத்தின் மீது மூன்று பிரிவின்கீழ்  போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News image
திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் எம். முருகானந்தம் மீது மூன்று பிரிவின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு
Updated On :18 மார்ச் 2021, 6:38 am

DIN

திருச்சி: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் எம். முருகானந்தத்தின் மீது மூன்று பிரிவின்கீழ்  போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம். அவர் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக கூட்டணிக் கட்சியினருடன் ஊர்வலமாக வந்த போது, பட்டாசுகளை வெடித்தனர்.

இதனையடுத்து, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வெடி பொருள்களை வெடித்தது , காவல்துறை உத்தரவை மீறியது மற்றும் பொதுமக்களுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் கூட்டம் கூடியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போலீசாருக்கும் மெமோ: இந்த சம்பவத்தில் விதிகளை அமல்படுத்த தவறிய திருவெறும்பூர் காவல் ஆய்வாளருக்கும் விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முருகானந்தம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது தேர்தல் அலுவலகத்திற்குள் இரண்டு பேருக்கு மேல் அனுமதித்தது மற்றும் தேர்தல் அலுவலகம் அருகே மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூடியதை தடுக்க தவறியது உள்ளிட்ட சம்பவங்களுக்காக விளக்கம் கேட்டு ஆய்வாளர் ரத்தினகுமாருக்கு திருவெறும்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் மெமோ கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.