ஏற்காடு (பழங்குடி தனி) தொகுதி தேமுதிக வேட்பாளர் வேட்புமனு
சேலம் மாவட்டம் ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதி, தேமுதிக வேட்பாளர் கே.சி.குமார், வாழப்பாடியில் , இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதி, தேமுதிக வேட்பாளர் கே.சி.குமார், வாழப்பாடியில் , இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில், அமமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் சின்னகல்வராயன் மலை வடக்கு நாடு ஊராட்சி கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்த கே.சி.குமார்(41) வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர் வியாழக்கிழமை வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில், ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சேலம் தனித்துணை ஆட்சியர் (முத்திரை) பி.கே. கோவிந்தனிடம் பிற்பகல் 2.00 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தேமுதிக மாற்று வேட்பாளராக கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம்(35) வேட்புமனு தாக்கல் செய்தார். தேமுதிக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், அமமுக சேலம் மாவட்ட அவைத்தலைவர் சண்முகம், வழக்கறிஞர் சுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...