மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பிரசாரத்தின் இடையே பிரேமலதாவை கரோனா பரிசோதனைக்கு அழைத்த அதிகாரிகள்

விருத்தாச்சலத்தில் பிரசாரம் செய்துகொண்டிருந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை கரோனா பரிசோதனைக்கு வருமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப்படம்)
Updated On :24 மார்ச் 2021, 8:36 am

DIN

விருத்தாச்சலத்தில் பிரசாரம் செய்துகொண்டிருந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை கரோனா பரிசோதனைக்கு வருமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிக 60 இடங்களில் போட்டியிடுகிறது. முன்னதாக விஜயகாந்த் போட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா போட்டியிடுகிறார். இதனால் விருத்தாச்சலத்தில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் இன்று விருத்தாசலத்தில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த பிரேமலதாவை சுகாதாரத்துறை அதிகாரிகள் கரோனா பரிசோதனைக்கு வருமாறு அழைத்துள்ளனர். 

பிரேமலதாவின் தம்பி சுதீஷுக்கும், அவரது மனைவி பூர்ணிமாவுக்கும் கரோனா தொற்று உறுதியானதை அடுத்து பிரேமலதாவையும் அழைத்துள்ளனர். ஆனால், பிரேமலதா கரோனா பரிசோதனை செய்துகொள்ள மறுத்துவிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.