ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் அதிர்வுடன் பயங்கர சத்தம்:  வட்டாட்சியர் விளக்கம்

மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதற்கு ராணுவ பயிற்சி விமானம்தான் காரணம் என்று வட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

News image
மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் அதிர்வுடன் பயங்கர சத்தம்:  வட்டாட்சியர் விளக்கம்
Updated On :27 மார்ச் 2021, 6:07 am

DIN


மயிலாடுதுறை: மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதற்கு ராணுவ பயிற்சி விமானம்தான் காரணம் என்று வட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறையில் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது குறித்து மாவட்ட வட்டாட்சியர் பிரான்சுவா விளக்கம் அளித்துள்ளார்.

பயங்கர சத்தம் கேட்டதாக வந்த புகாரினை அடுத்து, கோவாங்குடியில் நேரில் ஆய்வு செய்த வட்டாட்சியர் பிரான்சுவா, இந்த வெடிச்சத்தம் ஏற்பட ராணுவ விமானம்தான் காரணம். அந்த நேரத்தில் நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை.

ராணுவ விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கும்போது உண்டானதே இந்த பயங்கர சத்தம் மற்றும் நில அதிர்வு. எனவே மக்களுக்கு அச்சம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.