சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி: பெரியார் அமைப்பினர் கைது

தமிழகம் மற்றும் கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

News image
பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற பெரியார் அமைப்பினர் கைது
Updated On :30 மார்ச் 2021, 7:41 am

DIN

தமிழகம் மற்றும் கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு புறப்பட்டுச் சென்றார்.

பாலக்காட்டில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மீண்டும் தாராபுரம் வந்து வாக்கு சேகரிக்கிறார். இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமர் வருகையைக் கண்டித்து இன்று பீளமேடு பகுதியில் ‘கோ-பேக்’ மோடி என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, அவினாசி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை தொடர்ந்து த.பெ.தி.கவினர் 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் பீளமேடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.