தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சென்னை, செங்கல்பட்டு, கோவையில் கரோனா பரவல் அதிகரிப்பு: ராதாகிருஷ்ணன்

சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் கரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதாகவும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

News image
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
Updated On :31 மார்ச் 2021, 5:49 am

DIN


சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் கரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதாகவும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், சமூக இடைவெளியும் முகக்கவசம் மட்டுமே கரோனா பரவலில் இருந்து காக்கும். கரோனவுக்கு எதிராக முன்களப் பணியாளர்களும், மருத்துவர்களும் ஒரு போர் வீரர்களைப் போல பணியாற்றுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ வசதிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கரோனாவைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள். 

காய்ச்சல், சளி இருப்பவர்கள் மருத்துவமனைக்குச் செல்லாமல் இருந்தால் தொற்று அதிகமாக பரவ வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.