சென்னை: ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகர் நாளை முன்னிட்டு கடைகளுக்கு விடுமுறை அளித்த நிலையில், இந்த ஆண்டு மட்டும் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்று வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், மே 5-ஆம் தேதி வணிகர் நாளை முன்னிட்டு வணிகர் சங்க பேரமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மே 5, புதன்கிழமை காலை 9 மணியளவில் சென்னை கே.கே. நகர் ராமசாமி தெருவில் உள்ள பேரமைப்புக்குச் சொந்தமான வளாகத்தில் சென்னை மண்டலத்தலைவர் கே. ஜோதிலிங்கம் தலைமையில் வணிகக் கொடியேற்றும் நிகழ்ச்சியும், அன்று மாலை 4 மணியளவில் சென்னை கோயம்பேடு வணிக வளாகம் அருகில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கின்றன.
ஆண்டு தோறும் மே 5-ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை அளித்த நிலையில், இந்த ஆண்டு மட்டும், ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், வணிகர்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டும், கடைகளுக்கு விடுமுறை அளிக்காமல், மாலையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், அரசின் வழிகாட்டுதல்களுடன், உரிய கட்டுப்பாடுகளுடனும், பாதுகாப்புடனும் நடைபெறும் என்று பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமணர் சிலை

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்?
த்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சி: கா்நாடக அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



