ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கரோனா தடுப்புப் பணி: தனியார் மருத்துவமனைகள் முழுமையாக ஈடுபட வலியுறுத்தல்

உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

News image
மு.க.ஸ்டாலின்
Updated On :5 மே 2021, 12:17 pm

DIN


உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

மருத்துவ அவசர நிலை என சொல்லக் கூடிய அளவுக்கு தீவிரம் இருப்பதால் கட்டளை மையம் தொடங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கட்டளை மையத்தை (war room) உடனே திறக்க தலைமைச் செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்பு மக்கள் சேவையாக மாறிவிட்டது. போர்க்காலத்தில் செயல்படுவதைப் போல மருத்துவர்கள் செயல்பட்டு சேவையாற்றுகிறார்கள்.

உயிர் பாதுகாப்பிற்கு அவசியமற்ற அறுவை சிகிச்சைக்கு ஒதுக்காமல் கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும்.  ஆக்ஸிஜன் படுக்கை விவரங்களை தனியார் மருத்துவமனைகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

கட்டணச் சலுகை தர வேண்டும்:

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் ஏழைகளுக்கு கருணைகாட்டி அவர்கள் உயிரைச் செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும்.

இது கடினமான காலம். ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல. ஒவ்வொரு உயிரும் உன்னதமானது.

அனைவரும் ஒன்றிணைந்து முழுமையாக செயல்பட்டால் மகிழ்ச்சியான எதிர்காலத்தை அமைக்க இயலும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.