ஊரடங்கு நேரத்தில் அரசு பேருந்தில் பத்திரிக்கையாளர்கள் பயணிக்க விரைவில் முடிவெடுக்கப்படும்: அமைச்சர் ராஜ கண்ணப்பன்

ரோனா தொற்று ஊரடங்கு நேரத்தில் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு பேருந்தில் பத்திரிக்கையாளர்கள் பயணிப்பது குறித்து  விரைவில் முடிவெடுக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் ஆா்.எஸ். ராஜ
ஊரடங்கு நேரத்தில் அரசு பேருந்தில் பத்திரிக்கையாளர்கள் பயணிக்க விரைவில் முடிவெடுக்கப்படும்: அமைச்சர் ராஜ கண்ணப்பன்


சென்னை: கரோனா தொற்று ஊரடங்கு நேரத்தில் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு பேருந்தில் பத்திரிக்கையாளர்கள் பயணிப்பது குறித்து  விரைவில் முடிவெடுக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் ஆா்.எஸ். ராஜ கண்ணப்பன் தெரிவித்தார். 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 
கோயம்பேட்டில் நகரப் பேருந்துகளில் பயணித்த பெண்களிடம் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டம் குறித்து கேட்டேன்.  பெண்கள் நாள் ஒன்றுக்கு ரு.70 மிச்சம், மாதம் ரூ.2000 ஆயிரம் மிச்சமாகிறது என்று தெரிவித்தனர். மிக அருமையான திட்டம் என்று தெரிவித்தனர். இந்த அருமையான திட்டத்தை முதல்வர் அமல்படுத்தியுள்ளது பெண்களிடேயை பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும், போக்குவரத்துத் துறையை சீரமைக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. போக்குவரத்து துறையின் செலவீனங்களை குறைத்து வருவாய் அதிகரித்தல், சுகாதார வழிமுறைகளை பேருந்துகளில் சீராக கடைபிடித்தல், 14 -ஆவது ஊதிய ஒப்பந்தம் மற்றும் 'நிர்பயா' திட்டத்தினை விரைந்து செயல்படுத்துதல் , கிராம புறங்களில் பேருந்து தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் பேருந்து இயக்கம். துறையில் என்னென்ன பிரச்னைகள் உள்ளது, எங்கெல்லாம் உணவுக்காக பேருந்துகளை நிறுத்துகிறார்கள் என்பது குறித்து ஆய்வுக்கூட்டம் போக்குவரத்து துறை அதிகாரிகளிடளுடன் காலையும், போக்குவரத்து ஆணையர், இணை ஆணையர்கள், ஆர்டிஓக்களை அழைத்து அவர்கள் கீழுள்ள துறைகளில் உள்ள பிரச்சனை, எத்தனை பேருந்துகள், ஆட்டோக்கள் வருகிறது, எதுபோன்ற பிரச்னை உள்ளது, எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னை குறித்து மதியமும் சென்னை பல்லவன் இல்லத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. 

மேலும், தில்லி மற்றும் மேற்குவங்க மாநிலங்களை போல பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என தமிழகத்தில் தொடங்கப்பட்ட திட்டத்தினை விரிவு படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. 

பொதுமக்களுக்கு நிறைவான பேருந்து சேவை அளிக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் வேண்டுகோள். நல்ல நிர்வாகம் மக்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்பது முதல் நோக்கம்.

போக்குவரத் துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டங்களை எப்படி ஈடுகட்ட வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. முதலில் 1.6 கோடி பேர் பிரயாணம் செய்தனர். கரோனா தொற்றுக்கு பின் அது 90 லட்சமாக குறைந்துள்ளது. இரண்டாவது ஆலையின் தாக்கத்தால் தற்போது சுத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. இவைத்தவிர சுங்கக்கட்டணம் பாக்கி வேறு உள்ளது. 

பேருந்துகளில் ஏற்கெனவே அமலில் உள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்பயா திட்டத்தின் கீழ் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை  விரைவுப்படுத்துதல், பேருந்து வழிதடங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்ளும் "சலோ ஆப்" பயன்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

கரோனா நோய்த்தோற்று காலத்தில் மக்களுக்கு உதவியாக இருக்கும் துறையாக "தமிழக போக்குவரத்துதுறை" விளங்கும். முன்களப்பணியார்களை கொண்டு கரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு சேவை ஆற்றி வருகிறோம். கூடுதலாக பேருந்துகள் தேவைப்பட்டால் கொண்டு வருவோம். 

ஆக்சிஜன் பிரச்னையுடன் கரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ் இல்லாமல் அவதியுறும் நிலையில், பேருந்துகளில் ஆக்சிஜன் செட்டப்புடன் படுக்கை வசதியுடன் பயன்படுத்த சாத்தியம் உள்ளதா என சுகாதாரத்துறையுடன் கலந்து பேசி விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதுகுறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.  அரசு பேருந்தில் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள் ஊரடங்கு நேரத்தில் பயணிக்கவும் விரைவில் முடிவெடுக்கப்படும்.

சாதாரண பேருந்துகள் தற்போது கரோனா தொற்று காரணமாக குறைவாக இயக்கப்படுகிறது. தொற்று பாதிப்பு நிலைமை சரியானவுடன் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com