யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டையிலிருந்து 5 மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜன்: ஆட்சியர்

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம்  5 மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தகவல்

News image
மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ்
Updated On :18 மே 2021, 9:50 am

DIN

ராணிப்பேட்டை தலைமையிடமாக கொண்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம்  5 மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் வேகம் அதிகம் இருப்பதால் பிற நோயுடன் உள்ள கரோனோ நோய் தொற்றாளர்கள் மற்றும் கரோனா நோயின் தீவிரம் காரணமாக ஆக்ஸிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக தமிழக அரசு மாநில அளவிலான கட்டளை மையத்தினை ஏற்படுத்தி அதன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட சீரிய முயற்சியின் காரணமாக கரோனோ நோயாளிகளுக்கு சிலிண்டர் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களை ஒருங்கிணைத்து அனுமதிக்கப்பட்ட ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிலிண்டர் ஆக்சிஜன் வழங்கலை ஒழுங்குபடுத்திட ராணிப்பேட்டை மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இயங்கும். காவேரி கார்பானிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக சிலிண்டர் ஆக்ஸிஜன் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.