

கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியராக தமிழ்நாடு மாநில ஆணையத்தின் செயலராக இருந்த கே.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து அவரை துறை அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னாள் ஆட்சியராக இருந்த சந்திரசேகர் சாகமூரி கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு வேறு பணியிடம் ஒதுக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.