ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சங்ககிரியிலிருந்து முக்கிய ஊர்களுக்குச் செல்லும் பிரதான சாலைகள் வெறிச்சோடின 

சேலம் மாவட்டம் சங்ககிரி நகரில் முழு பொது முடக்கத்தையொட்டி பல்வேறு பிரதான சாலைகள் புதன்கிழமை வெறிச்சோடியது. 

News image
சங்ககிரி அருகே உள்ள ஈரோடு}பவானி பிரதான சாலைகள் வாகனங்கள் ஏதும் செல்லாமல் வெறிச்சோடி உள்ளது.
Updated On :19 மே 2021, 10:32 am

DIN

சேலம் மாவட்டம் சங்ககிரி நகரில் முழு பொது முடக்கத்தையொட்டி பல்வேறு பிரதான சாலைகள் புதன்கிழமை வெறிச்சோடியது. 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி தமிழக அரசு மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி அதிகாலை வரை முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சங்ககிரியில் காலை 10 மணிக்கு மேல் சங்ககிரியிலிருந்து சேலம், திருச்செங்கோடு, எடப்பாடி, பவானி, ஈரோடு செல்லும் சாலைகள் அதிகளவில் வாகனங்கள் செல்லாமல் வெறிச்சோடி உள்ளன. இதில் அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள், மினி ஆட்டோக்கள் சென்று வருகின்றன.

தேவையில்லாமல் நகருக்குள் வருபவர்களை  கட்டுப்படுத்துவதற்காக சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள புதிய எடப்பாடி சாலையில் ஒரு புறச்சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இரு சக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருவதை அறிந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் குறுக்கு வழிகளில் சென்று வருகின்றனர்.

சாலைகளில் வாகனங்கள் அதிகளவில் செல்லாததால் அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்ற. இந்த வாகனங்களை கவனிக்காமல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் வேகமாக சென்று வருவதால் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வேகமாக செல்லும் இரு வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.